Tuesday 26 April 2016

ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவர்ஸ்' .. மறக்க முடியாத கார்ட்டூன்

ஹீ-மேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவர்ஸ்' .. மறக்க முடியாத  கார்ட்டூன் ..


He-man.jpg




எண்பதுகளில் ஞாயிற்றுக் கிழமை காலையாகி விட்டால்போதும், மின்னல் ஓசையுடன் 'ஹீமேன் அண்ட் தி மாஸ்டர்ஸ் ஆஃப் யுனிவர்ஸ்' என்ற குரல் கம்பீரமாக ஒலிக்கத் தொடங்கிவிடும். ஹீ-மேன் ஏதேதோ பேசிக்கொண்டே வாளைத் தூக்கிக் காட்டுவார். அதே போல ஹீ-மேனின் தொடை நடுங்கிப் புலி, காமெடி மேஜிசியன் ஆர்கோவ் மிகவும் பிரசித்தம்.

தொலைக்காட்சி முன்பு மொத்தக் குடும்பமும் உட்கார்ந்து தூர்தர்ஷனில் வந்த ஹீமேன் கார்ட்டூன் தொடரைப் பார்த்த காலம் அது. இருபது ஆண்டுகளைத் தாண்டி இன்றைக்கும் ரசிக்கப்படுகிறது ஹீமேன் கார்ட்டூன் தொடர்.


உருவான கதை:

showposter.jpg?v=525c2abf

1976-ம் ஆண்டு ஸ்டார் வார்ஸ் என்ற படம் வெளியானது. அப்போது, அதன் சந்தைப்படுத்தும் உரிமையைப் பெற அமெரிக்காவின் மிகப்பெரிய பொம்மை கம்பெனியான மேட்டல் நிறுவனத்தின் உரிமையாளர் ரே வாக்னர் முயன்றார். ஆனால், அவரால் பெற முடியவில்லை. அந்தப் படம் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்றது. அதன்பின் அப்படத்தின் பொம்மை, டி ஷர்ட் போன்றவை வசூல்மழை பொழிந்தது. பிறகு அதைப் போலவே வெற்றிகரமான பொம்மையைத் தயாரிக்கும் முயற்சியில் சுயமாக ஈடுபட்டார் வாக்னர்.


அதன் விளைவாக ரோஜர் ஸ்வீட் கைவண்ணத்தில் உருவானதுதான் ஹீமேன் பொம்மை. இந்தப் பொம்மை தயாரான உடனேயே விற்பனையில் சாதனை படைத்தது. உடனே எழுத்தாளர் டொனால்ட் கிளட்டும், ஓவியர்கள் ஆல்ஃபிரெடோ அல்காலா, எர்ல் நோரம் ஆகியோரைக்கொண்டு இதன் மூலக்கதையை காமிக்ஸ் வடிவில் உருவாக்கினார்கள். அந்தத் தொடரும் வெற்றி பெற்றது.

இதற்கிடையில் அர்னால்ட் நடித்த கோனன் படமும் ஹீமேன் கதையும் ஒன்று போலவே இருப்பதாக வழக்கு தொடரப்பட்டது. ஹீமேன் கதாபாத்திர காமிக்ஸ் கதையைத் தயாரித்த குழு, அதற்கு முன்பு கோனன் காமிக்ஸ் தொடரில் பணிபுரிந்தவர்கள் என்பதுதான் இதற்குக் காரணம். வழக்கில் வெற்றி பெற்ற மேட்டல் நிறுவனம் அதற்குப் பிறகு தொலைக்காட்சி அனிமேஷன் தொடர், திரைப்படம் என்று ஹீமேனை உலக அளவில் பிரபலப்படுத்தியது.


ஹீமேனின் கதை:

he-man_and_the_masters_of_177_1280.jpg

எடர்னியா என்ற கிரகம் உள்ளது. இது அறிஞர்கள் அனைவரும் ஒன்றுகூடும் சபை. இந்தச் சபையில் ஒரு தேவதை தோன்றி வரவிருக்கும் ஆபத்தைப் பற்றி எடுத்துரைக்கிறார். அறிஞர்கள் தங்களது சக்தியையும், மெய்யறிவையும் ஒரு சக்திக் கோளமாக மாற்றுகிறார்கள்.


அது தீயவர்களின் கையில் சிக்காமல் இருக்க அதைச் சுற்றி, மண்டை ஓடுபோலத் தோற்றமளிக்கும் கிரேஸ்கல் என்ற கோட்டையாக மாற்றுகிறார்கள். உலகின் அதிகபட்ச சக்தியை அளிக்கவல்ல இந்தக் கோளம், தேவதையின் வாக்குப்படி இளவரசர் ஆடம் வசம் வந்தடைகிறது.

இந்தக் கோளத்தின் மூலமாக ஆடம் ஒரு வாளைப் பெறுகிறார். சக்தியுள்ள அந்த வாளைக் கையில் எடுத்தாலே போதும். உலகிலேயே மிகவும் வலிமை கொண்ட ஹீமேனாக மாறிவிடுகிறார் ஆடம். அவரது பயந்தாங்கொள்ளி வளர்ப்புப் புலியான க்ரிங்கரும், போர்க்குணம் கொண்டதாக மாறிவிடுகிறது.

No comments:

Post a Comment