Thursday 28 April 2016

விஜய் ஏற்பாடு செய்த 'தெறி' ஸ்பெஷல் காட்சி யாருக்கு தெரியுமா?

விஜய் ஏற்பாடு செய்த 'தெறி' ஸ்பெஷல் காட்சி யாருக்கு தெரியுமா?

இளையதளபதி விஜய் நடித்த 'தெறி' திரைப்படம் தமிழகத்தில் மட்டுமின்றி உலகம் முழுவதும் சூப்பர் ஹிட் ஆகியுள்ளது. இந்நிலையில் இந்த படத்தை விஜய் ரசிகர்கள் மட்டுமின்றி அனைத்து தரப்பினர்களும் ஆர்வத்துடன் பார்த்து வருகின்றனர். எனவேதான் இரண்டாவது வாரத்திலும் இந்த படம் கிட்டத்தட்ட ஹவுஸ்புல் காட்சிகளுடன் திரையரங்குகளில் ஓடிக்கொண்டிருக்கின்றது.


இந்நிலையில் சென்னை பிரசாத் லேபில் 'தெறி' படத்தின் சிறப்புக்காட்சியை முக்கிய விஐபிக்களுக்காக விஜய் ஏற்பாடு செய்துள்ளார். அந்த முக்கிய விஐபிக்கள் யார் தெரியுமா? பிரபல நடிகரும் இயக்குனருமான ராகவா லாரன்ஸ் நடத்தி வரும் டிரஸ்ட்டில் வளரும் குழந்தைகள்தான் என்பது குறிப்பிடத்தக்கது.

60 குழந்தைகள் 'தெறி' படத்தை உற்சாகமாக பார்த்து மகிழ்ந்தனர். விஜய்யின் முந்தைய படமான 'புலி' படத்தையும் ராகவா லாரன்ஸின் டிரஸ்ட் குழந்தைகள் திரையரங்கில் பார்த்து ரசித்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


 

No comments:

Post a Comment